நான் வாழ்க்கை எனும் பல்கலைகழகத்தில் தோல்வி எனும் பாடத்தில் பலப் பட்டங்கள் பெற்றவன் இன்றும் பெற்றுக்கொண்டிருப்பவன். நான் துவண்டு விடுவேன் என நினைத்து தூற்றினர் பலர். ஆனால் பாவம் அவர்கள் அறியவில்லை அவர்கள் தூற்றியது என் வாழ்க்கைச் சோலையில் வீசப்பட்ட உரமென்று. நான் பல நேரங்களில் அம்பாக மாறி பலரை காயப்படுத்தியிருக்கிறேன்.எய்தவன் எங்கோ இருக்க அம்பாகியாகிய நான் அவமானப்பட்டிருக்க்கிறேன். பலருக்கு படிக்கல்லாகவும் ஏணியாகவும் உருமாறியிருக்கிறேன்.
பல நேரங்களில் பயணசீட்டு வாங்காத பயணிபோல் பலர் முன்னிலையில் அவமானப்பட்டிருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- kadaikodiyaan1
- Chennai, Tamil Nadu, India
- முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteProfileiye oru articlea eluthukira ore aal neerthaan oy
ReplyDelete