Monday, January 11, 2010

அண்ணாந்து பார்க்கிறோம்

அண்ணாந்து பார்க்கிறோம்

அன்று நீ......
முக்கடலும் சங்கமிக்கும் குமரியிலே
எம் அன்னையின் பாத பாறையிலே
தவம்மது புரிந்தாய்....

ஞாலம் பிறக்கும் முன் பிறந்த காலந்தொட்டு
எம் மண்ணின் ஆன்மீகத்தை ஆராய
இமயம் முதல் குமரி வரை
நடை உனது வாகனமாய்
பசி உனது உணவாய்
தாகம் உனது நீராய்
இலக்கு நோக்கிப் பயணித்தாய்
தேசம் முழுவதும்.....
காவிகட்டியத் துறவியாய் அல்ல
ஓரு கர்ம யோகியாய்.

மிருகபலத்தால் அல்லாமல்
ஆன்மீக பலத்தால் மட்டுமே
பாரதம் எழுச்சிப்பெற போகிறது என
உலகோருக்கு உரக்கச் சொன்னாய்...


சிக்காகோ மாநகரில் சீரியப்பேச்சால்
உலக மாந்தரை உடன் பிறந்தோர் என்றாய்
உலகம் உனையன்று ஆச்சர்யமாய் பார்த்தது
நாங்களின்றுனை அண்ணாந்து பார்க்கிறோம்....

மா.பொ.
சூளைமேடு

குறிப்பு :- 12.01.2010 சுவாமி விவேகானந்தர் அவர்களின் 148-வது ஜென்மதினம்

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers