உன்னைப்போல் ஒருவர் இன்னும் கிடைத்தப்பாடில்லை...
அன்று நீ.........
பாரதத்தின் ஆன்மீகத்தை
அகிலம் அறிய வைத்தாய்
காவியுடையில் காவியம் படைத்தாய்....
கர்மயோகத்தை கருத்தாய் காத்தாய்
மேலை நாட்டினருக்கு.....
கீழை நாட்டின்.......
கீதையின் பாதையை
கீர்த்தியாய் சொன்னாய்....
அறுசுவை உணவுகொடு பின்
அறிவு புகட்டு என்றாய்........
சக நாட்டுச் சகோதரர்கள்
சகதியில் கிடந்ததால்....
பட்டாடையையும் பஞ்சு மெத்தையையும்
பரங்கியர் படுக்கத் தந்தபோது......
பாங்காய் பரிவுடன் தவிர்த்தாய்
உலக சமய மாநாட்டில்.......
சீமான்களே சீமாட்டிகளே என
மேலைநாட்டினர் அரங்கினரை அழைக்க
நீயோ..... சகோதர சகோதரிகளேயென
சாந்தாமாய் அழைத்தாய்
அமர பாரதத்தின் ஆன்மீக கலாசாரத்தை
அழகாய் சொன்னாய்....
நாமெலாம் சோதர சோதரிகளென...
உலகோருக்கு உரக்கச் சொன்னாய்
உலகில் பாரதத்தை உயர்த்திப்பிடித்தாய்....
ஒரு நூறு இளைஞனைத் தாருங்கள்
அவர்கள் மூலம்
நான் பாரதத்தை உலகின் குருவாய்
மாற்றி காட்டுகிறேன் என்றாய்..... இன்று
ஒரு நூறு என்ன பலநூறு இளைஞர்கள்
உன் பாதை தொடர்ந்திடத் தயார் தான் - ஆனால்
எங்களுக்கு அண்ணலே உன்னைப்போல்
ஒருவர் இன்னும்......................
எங்களுக்கு கிடைத்தப்பாடில்லை
-மா.பொ
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- kadaikodiyaan1
- Chennai, Tamil Nadu, India
- முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....
Blog Archive
-
▼
2011
(17)
-
▼
July
(17)
- பொங்கலோ பொங்கல்
- சுவாமி விவேகானந்தர்..
- தலைப்பிரசவம்....
- விடைபெறுகிறேன்....
- வலியை மறந்து....
- ஆங்கில புத்தாண்டு....
- தீபாவளி வாழ்த்துக்கள்...
- குமுறலுடன்
- என் எண்ணக்கிறுக்கல்கள்
- நேர்ச்சை மற்றும் கானிக்கை...
- சித்திரைத்திங்கள்....
- தீபாவளி....
- மகளிர் இடஒதுக்கீடும் நானும்...
- என் பார்வையில் செய்தி....(நித்யானந்தர் ..)
- சில ஓவியங்களும் ஓசைகளும்............
- சத்தமில்லா சலனம்...
- தீபாவளி...
-
▼
July
(17)
No comments:
Post a Comment