Monday, July 11, 2011

நேர்ச்சை மற்றும் கானிக்கை...

நண்பர்களே எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை மையமாக வைத்து என்னுள் தோன்றிய சில எண்ணங்கள்

இறைவனுக்குப் படைக்கின்ற உணவுகள் எல்லாம் படைப்பவன் மட்டும் சாப்பிடுவதில்லை..

நம் பாரதக்கலச்சாரப்படி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ஆம் தன் சுற்றத்தார் ஏழைகள் அனைவருக்கும்

அதனை பரிமாறி மகிழ்வான் இன்றும் பல கோவில்களில் அன்னதான மண்டபங்களில் மிகச் சிறப்பாக அன்னதானங்கள் நடக்கிறது

எனவே இறைவனுக்கு படைக்கின்ற உணவு மக்களுக்குத்தான் பயன் படுகிறது.... ஆகவே நம் முன்னோர்கள்

காரண காரியங்கள் இல்லாமல் எதுவும் செயல் படுத்தமாட்டார்கள்

அடுத்தது முடிககாணிக்கை செலுத்துவது , ஒரு பக்தன் தன்ணுடைய அழகியல் தன்மையைவிட்டு இறைத்தன்மைக்காய்

தன் முகப்பொலிவையையும் துறப்பதற்கு தன் மனநிலையை மாற்றுகின்றான். இது ஒரு அர்ப்பண பாவமுறை.... ஒரு வித நம்பிக்கை

அதே நேரம் முடிக்காணிக்கையால் சமுதாய நன்மையும் இருக்கிறது.. எ.கா....

திருப்பதியில் நாம் கொடுக்கின்ற முடிக்காணிக்கையால் கிடைக்கின்ற ஆண்டு வருமானம் சுமார் ரூ500கோடிக்குமேல்

இப்பணம் எங்கே போகிறது தெரியுமா ஆந்திரவின் அரசாங்க கஜனாவிற்குதான் இந்தபணமூலம் நல்ல பல திட்டங்கள்

அரசாங்கத்தால் தீட்டப்பட்டு ஏழைகளை சென்றடைகிறது. இங்கே பழனியிலும் திருச்செந்தூரிலும் இதுதான் நடக்கிறது...

வேளங்கண்ணி மாதக்கோவிலிலும் கேரளா மாநிலம் இடத்துவா கிறிஸ்துவ ஆலயத்திலும் முடிகாணிக்கை செலுத்தும் முறைகள்

உண்டு(அங்கு வருகின்ற வருவமானம் அரசு கஜனாவிற்கு போவதில்லை அது வேறு விசயம்) ...


இந்து ஆலயங்களில் சமர்ப்பிக்கின்ற காணிக்கைகள்(பல ஆயிரம் கோடிகள் )அனைத்தும் அரசாங்க கஜனாக்களுக்கே சென்று

சேர்கின்றன... குறிப்பாக திருப்பதி வருமானம் தான் ஆந்திராவின் பட்ஜெட்டின் முக்கியமான நிதி ஆதாரம். சபரி மலையின்

வருமானம் கேரளா அரசின் முக்கிய நிதி ஆதாரம்... ஆகவே கடவுள் கேட்டாரோ இல்லையோ காணிக்கை செலுத்தும் முறையில்

தவறு இல்லை... அப்பணத்தால் ஏழைகள் தான் பயன் பெறுகிறார்கள். எல்லா மத வழிபாட்டு தலங்களிலும் காணிக்கை செலுத்தும்

முறை உள்ளது. சில வழிபாட்டு தலங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்டாய காணிக்கை செலுத்தும் முறைகள்க்கூட இருக்கிறது.

இவை அனைத்து செயல்களும் எந்தக் கடவுளும் கேட்டதால் நாம் செய்வதில்லை..... கடைசியாக...

ஒரு நாத்திகர் ஒரு ஆத்திகரிடம் ஒருக் கேள்விக்கேட்டார்.....உலகத்தில் உள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், இந்துக்களும்

தவறாமல் பிரார்த்தனை செய்கின்றனர்.இவர்கள் அனைவரும் தங்களுக்காகவும் தங்கள் சார்ந்த சமுதாய முன்னேற்றங்களுக்காய்

பிரார்த்திப்பார்கள். ஆனால் இந்த உலகில் இன்றும் ஏழ்மை,அறியாமை, பசிக்கொடுமை, கொடும்நோய்கள், பஞ்சம் பட்டினி

தீவிரவாதம்,வன்முறை, பலியல் வல்லூறுகள் என பல்வேறு பிரச்சினைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகில்

ஒருவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள்...25% பேர்..... சர்வ வல்லமை வாய்ந்த இறைவன் உங்களின் பிரார்த்தனையால் ஒரே

நாளில் மேற்சொன்ன அனைத்து பிரச்சினைகளையும் ஒரே நோடியில் தீர்த்து விடலாமே.... எனக்கூறி ஒரு ஏளன பார்வைப்

பார்த்தால் இந்த ஆத்திகரோ புன்ம்றுவலோடு... கீழ் கண்டவாறு சொன்னார்...

எல்லாரும் பிரார்த்திக்க்றார்கள் யாரும் தங்கள் மதம் கோட்பாடுகளுக்கு தக்கப்படி வாழவில்லை.... அனைவரும் குளிர்சாதனப்

பெட்டியிலுள்ள குளிர்பானங்களைப்போல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் சற்றே விளக்கமாகச் சொன்னால்.. குளிபானங்கள்

அனைத்தும் குளிர்சாதனப்பெட்டியிலுள்ளவரை குளிர்ச்சியாக இருக்கும் அதைவிட்டு வெளியே வரும் போது அதன் தன்மை மாறி

விடும்....அதேப்போல நாமும் பிரார்த்திக்கும் போதும் புனித நூல்களை படிக்கும் போதும்வழிபாட்டுத்தலங்ளிலும் ஒரு ஆன்மீக

பிள்ம்பாக மாறி விடுகிறோம் அந்நிலையில் இருந்து மாறி சாதரண நிலைக்கு வரும்போது அங்கே பிரார்த்தித்ததும் படித்ததும்

மறந்து விடுகிறோம்.கீதையில் கண்ணன் சொல்கிறார் கர்மத்தைச்செய் பலனை எதிர்பாராதே... நம்மில் எத்தனைப்பேர்

கடைப்பிடிக்கிறோம்...பைபிலில் உன்னை நேசிப்பதுப்போல் உன் அயலானையும் நேசி என்று சொல்லபட்டிருக்கிறது... நம்மில்

எத்தனைப்பேர் கடைப்பிடிக்கிறோம்குரானில் உன்னில் இருப்பவற்றில் இல்லாதவணுக்கும் கொடு நம்மில் எத்தனைப்பேர்

கடைப்பிடிக்கிறோம் ..... என அனைவரும் அவரவர் மத அறிவுரைப்படி வாழ்ந்தால் மேற்சொன்ன பிரச்சினைகள் அனைத்தும்

உலகில் ஒருநொடியில் முடிவுக்கு வரும்.. ..... என பதிலளித்தார் அந்த பெரியவர்........

எனவே நம் முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்ததில் தவறு ஒன்றும் இல்லை .....


மேலே சொல்லப்பட்டவை என் எண்ணத்தின் வண்ணங்களே அன்றி வேறு எந்த உள் நோக்கவும் கிஞ்த்தும் இல்லை





- மா.பொ...

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers