Monday, July 11, 2011

தலைப்பிரசவம்....

தலைப்பிரசவம்..............

தாய்மை யடைந்தவளுக்கு

முதல் குழந்தை....

கவிஞனுக்கு முதல் கவிதை

பாடகனுக்கு முதல் பாடல்

அரசியல் வாதிக்கு முதல் பதவி

விஞ்ஞானிக்கு முதல் கண்டுபிடிப்பு

மாணவனுக்கு......

உயர்நிலைத் தேர்வு முடிவு...

இளைஞனுக்கு முதல் முயற்சி

கணினி பொறியாளனுக்கு....

முதல் மென்பொருளாக்கம்....

மருத்துவருக்கு.....

முதல் அறுவைச் சிகிச்சை

வழக்குரைஞனுக்கு முதல் வழக்கு-ஆனால்

விவாசாயிக்கும் ஏழைப் பாழைகளுக்கும்

என்றுமே........

தலைப்பிரசவம் தான்......

-மா.பொ

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers