மனமின்னும் லயிக்கவில்லை
தீபாவளித் திருநாள்.....
தர்மம் காக்க அசுரனையன்று
அந்த அச்சுதன் அழித்த நாள்........
தீபாவளித் திருநாள்...........இந்நாளை
ஆண்டாண்டு காலமாய் ஆனந்தமாய்
நாம் கொண்டாடுகிறோம்....
சிறார்களாய் சிட்டு குருவிகளாய்....
வலம் வந்த நம் வசந்த காலங்களில் நாம்
பண்டிகையின் வருகைக்காய் காத்திருந்த நாட்களுண்டு...
பெற்றோர்க்கும் பண்டிகையென்றாலே பதட்டம் தான்....
பிள்ளைகள் மனம் கோணாமல்....
கொண்டாடவேண்டுமென்ற பதட்டம்.... நமக்கோ...
விதவிதமான பலகாரங்களிலும்..... பட்டாசுகளிலும்
வண்ணமயமான புத்தாடைகளிலும் மனம் லயிக்கும்
பங்காளிகளோடும் பக்கத்து வீட்டாரோடும் நாம்
கொண்டாடிய தீபாவளி இன்னும் பசுமையாய்
இதயத்தின் ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது....
காலங்களும் மாறின காட்சிகளும் மாறின
கலைந்து போன கனவுகளோடு கைக்குலுக்க வேண்டி
கிராமம் விட்டூ நகரம்,நகரம் விட்டு பல நாடுகளென
கலைந்து போனோம் பலதிசைகளில்..... இன்று
வசதிகள் வந்தாச்சு வாய்ப்புகள் வந்தாச்சு...
விதவிதமான பலகாரங்கள் பலவிதமான பட்டாசுகள்
விலையுர்ந்த புத்தாடைகளெல்லாம் வீட்டிற்கு வந்தாச்சு
வீதியெங்கும் கூட கொண்ட்டாட்டம் தான் - ஆனால்
மனம் தான் அன்று போல் இன்னும் லயிக்கவில்லை
மா.பொ
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- kadaikodiyaan1
- Chennai, Tamil Nadu, India
- முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....
Blog Archive
-
▼
2011
(17)
-
▼
July
(17)
- பொங்கலோ பொங்கல்
- சுவாமி விவேகானந்தர்..
- தலைப்பிரசவம்....
- விடைபெறுகிறேன்....
- வலியை மறந்து....
- ஆங்கில புத்தாண்டு....
- தீபாவளி வாழ்த்துக்கள்...
- குமுறலுடன்
- என் எண்ணக்கிறுக்கல்கள்
- நேர்ச்சை மற்றும் கானிக்கை...
- சித்திரைத்திங்கள்....
- தீபாவளி....
- மகளிர் இடஒதுக்கீடும் நானும்...
- என் பார்வையில் செய்தி....(நித்யானந்தர் ..)
- சில ஓவியங்களும் ஓசைகளும்............
- சத்தமில்லா சலனம்...
- தீபாவளி...
-
▼
July
(17)
No comments:
Post a Comment