Monday, July 11, 2011

மகளிர் இடஒதுக்கீடும் நானும்...

பாரதியின் கனவும் கவிதையும் நனவாகி இருக்கிறது....

நல்ல விசயம் தான் நான் கொஞ்சம் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்

நல்ல விசயம் நடந்திருக்க்கிறது ஆனால் பயம் இன்னும் அகல வில்லை

பாரத அரசியலில் மூன்று பெண்களை நம் அரசியல்வாதிகளால்(ஆண்கள்) சமாளிக்க முடியவில்லை

ஒருவர் நம்மூர் ஜெயலலிதா இன்னொருவர் மாயவதி மற்றோருவர் மம்தா பானர்ஜி...

கக்க கக்க போ....இனி பாராளுமன்றம் இனி என்னப்பாடுபடப்போகிறதோ! அங்கேயும் துரைமுருகன்களும் செல்விகளும் உருவாமாகல்

இருக்கட்டும். இடஒதுக்கீடு இல்லாமல் ஒரு சபாநாயகர்(திருமதி.மீரா குமார்) ஒரு மக்களைவை எதிர்க்கட்சி த் தலைவவி

(திருமதி.சுஷ்மாஸ்வராஜ்) ஒரு தமிழக எதிர்க்கட்சித்தலைவி(செல்வி.ஜெயலலிதா)...ஒரு இரயில்வே அமைச்சரும் வங்காளத்தின்

செஞ்சட்டைகளின் சிம்மச்சொப்பனமாகவும் விளங்கும் ஒரு தலைவி(செல்வி.மம்தா பான்ர்ஜி) உ.பி முதல்வர் செல்வி.மாயவ்தி, காங்கிரஸ்

கட்சியின் செய்தித்தொடர்பாளர் திருமதி.ஜெயந்தி நடராஜன் உமா பாரதி போன்றோரை நம் நாட்டுக்கு அறிமுகப்ப்டுத்தியிருக்கிறது.

இந்திரா கந்தி ,சோனியா காந்தி, கனிமொழி ,கீதா ஜீவன், பூங்கோதை ,ஷீலா தீட்சித், வசுந்தர ராஜே சிந்தியா பிரியங்கா போன்றோரெல்லாம்

குடும்ப ஒதுக்கீட்டி உள் புகுந்தவர்கள்.இவர்கள் மேற்கூறிய பட்டியலில் இடமில்லை. இந்த இடஒதுக்கீட்டின் நோக்கத்தில் பழுதில்லை

ஆனால் நடைமுறையில் வாரிசு ஒதுக்கீடும் குடும்பஒதுக்கீடும் தான் கூட்டு சேர்ந்து கும்மிஅடிக்கும். சும்மா சொல்லவில்லை

உள்ளாட்சியில் ஒதுக்கீடு கொண்டுவந்தார்கள் என்ன நடந்தது அரசியல் வாதிகளின் ம்னைவிகள் மகள்கள் மரும்க்கள் பேரன் பேத்திகள்

என அனைவரும் பல நகராட்சிகளையும் மாநகராட்சிகளையும் பதவிகளால் அலங்கரித்தார்கள்.... ஏன் அரசியல்வாதிளின்

கைப்பாவைகளாகத்தான் இன்றளவும் செயல் பட்டு வருகின்றனர்... அவர்கள் காட்டுகின்ற இடங்களில் மட்டும் கையெழுத்துப்போடும்

வேலைகள் மட்டும்தான் தாய்க்குலங்களின் வேலை....இந்த நிலமைதான் பாரளுமன்ற சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்(மகளிர்

இடஒதுக்கீடு மசோதாவினால்) நடக்குமோ என உளப்பூர்வமாய் அய்யம் ஏற்படுகிறது. மொத்ததில் 33% இடஒதுக்கீடு என்பது

அரசியல்வாதிகளின் குடும்பங்களிலிருந்தும் அவர்களின் தொடுப்புகளின் குடும்பங்களிலிருந்தும் வரப்போகிறார்கள்

பட்டது இளவரசர்களைப்பார்த்த நாம் இனி பட்டத்து ராணிகளையும் மகாராணிகளையும் பார்க்கப்போகிறோம்

ஆண்வாரிசுகள் மட்டும்தான் அரசியலில் குதித்து கோடிகளை சுருட்ட வாய்ப்புக்கிடைத்த நிலை மாறி பெண்வாரிசுகளுக்கும்

ஒரு அரிய வாய்ப்புக் வழங்கபடவுள்ளது நம் அரசியல் சாஸனம் ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

இல்லை இவையெல்லாம் நடக்கப்போவதில்லை குப்பம்மாளும் சுப்பாமாளும் முனியம்மாளும்(சாதரண எந்த அரசியல்

பின்புலமில்லாமல் வரவாய்பிருக்கிறது என நினைத்தால் நான் அவர்களிடத்தில் மனப்பூர்வமாய் மன்னிப்பு கோருகிறேன்.

உண்மையிலே நோக்கம் நிறைவேற வேண்டும் எனற ஆவல் எனக்குமுண்டுதான் நம்மால் ஆசைப்படமட்டும்..முடியும் என்ன செய்ய......

அது சரி....

முதலில் 1992 முதல் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆறப்போடப்பட்ட மகளிர் மசோதா , திடீரென அவைக்கு வந்த்ததன் காரணம் என்ன ?

மகளிர் மசோதா!!!! இராஜ்ஜியசபையில் (பின்புறமாக பாரளுமன்றம் வருதல் என்பார்கள் - படித்தவர் அவை என்றும் சொல்லப்படும்)மட்டுமே நிறைவேறியுள்ளது. படித்தவர் அவையில் நிறைவேறியது பாமரர் அவைக்கும் வரட்டும்.

இராஜ்ஜியசபையில் உறுப்பினர் என்பது நியமனம் செய்வது.- அதில் 33% சிக்கல் வராது.
மக்களவை என்பது இந்திய குடிமக்களால் நல்ல/கள்ள ஓட்டில் முடிவு செய்வது. அதில்தான் சிக்கலே. பார்க்கலாம்.
இராஜ்ஜியசபையிலேயெ லல்லுவும், முலயாமும் செய்த ரகளை மன்மொஹனாரை மிரட்டியுள்ளது.மக்களவையில் பார்ப்போம்.

அதுசரி.... மகளிரின் 33% ல் பழங்குடியினர்பெண்ணுக்கும், திருநங்கைகளுக்கும் 1சதவிகிதம் ஒதுக்கப்படவேண்டும் என கோரிக்கை வந்தது ஒரு சமயத்தில். அது பற்றி ஏதும் விளக்கம் உண்டா??????.

நேற்று இரவு தூர்தர்சனில் இந்த மசோதா குறித்த விவாததங்கள் காட்டப்பட்டன. அதிலிருந்து.
ஒரு நல்ல விசயம் நடந்தது : இந்த மசோதாவில் ஆயிரம் குறைகள், குதர்க்கங்கள் சொல்லி வந்த (1998 முதலே) செஞ்சடைக்காரர்கள் பிரச்சினை இன்றி ஆதரித்தது. நன்றி: பிருந்தா கரத்.

கட்சி பாகுபாடின்றி மகளிர் உருப்பினற்கள் கை கோர்த்தாலும், சுஷ்மா சுவராஜ், பிருந்தா கரத் ஆகியோரிடம் இருந்த ஆரோக்கியமான உணர்வு, மற்றவர்களின் பேச்சில் இல்லை. ஜெயந்தி நடராஜன் அதனை UPA அரசாங்கத்தின் வெற்றி என்றார்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் என்பதனை நிரூபித்தார்.மம்தா சுருக்கமாக "வெல்கம்" என்றார்.

மன்மோகனார் எழுதி வைத்தி படிப்பதை விடமாட்டாரா???????????

சன் திரை விமர்சனம் பாணியில் : மகளிர் மசோதா!!!! குழாயடிச்சண்டை
மா.பொ

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers