Monday, July 11, 2011

விடைபெறுகிறேன்....

\


வாழ்க்கைச் சக்கரத்தின்..... வேலை எனும் அச்சு...


கல்வி எனும் கங்கை நீராடிவிட்டு

வேலை வேண்டி பயணம் தொடர்ந்தேன்

காலம் எனை சென்னைக்கு வரவைத்தது

சென்னை எனை அன்போடு அரைவணைத்து

என் தகுதிக்கு வேலை வழங்கியது

எங்கல்லாமோ சுற்றித்திரிந்து கடைசியாய்

காலம் எனை ZAMIL STEEL - னுள் கடந்து வரச்செய்தது

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், அன்றிலிருந்து

இன்றுவரை.......(இடையிலே மூன்றாண்டுகள் தவிர)

ZAMIL STEEL அங்காமாயிருந்தது ஆனந்தம் தான்

ZAMIL - லில்.........

நானாக வந்திங்கு நாமாக ஆனோம்

ZAMIL கடல் தன்னில் துளியாக ஆனோம்

ஊரேக மனமில்லை உறவுகளை பிரிந்து

பல கற்றும் பல கேட்டும் அன்பில் திளைத்தேன்

நண்பர்கள் ஆசான்கள் நல்லாசி வேண்டும்..... வேறு

வேலை அழைக்கின்றது போகத்தான் வேண்டும்......

எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த மேலாளர்கள்

குறிப்பாய்....

எனக்கு மீண்டும் வாய்ப்பளித்த பொது மேலாளர்,

MP2 மேலாளர் அவர்களுக்கும் மற்றும்

அன்பு நண்பர்கள் சக ஊழியர்கள் அனைவருக்கும்

எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்து

வாழ்க்கைச் சக்கரத்தின் எதாவது ஒரு கோணில்

மீண்டும் நாம் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்

தற்காலிகமாய் விடை பெறுகிறேன்.............

நண்பர்களுக்கு.......

என் உழைப்பிலே உடனிருந்து உயர்விலே ஊக்கமளித்து

அயர்விலே ஆதரவளித்து அன்பிலே அரவணைத்த

ஆருயிர் தோழர்களே..! நம் நீங்கா நல் நினைவுகளுடன்.....

நீங்குகிறேன் ZAMIL - ஐ விட்டு..............

தொடர்புக்கொள்ள விருப்பமெனில் அணுகவும் தயக்கமின்றி

வேண்டியது உடன் செய்வேன்,அணுஅளவும் தயக்கமின்றி




மா.பொ......


யோக ஷேமோ ந: கல்பதாம் - யஜூர் வேதம் 22:22

இறைவன் அருளால் நாம் எல்லா நாட்களும் பெறுவோமாக

ஆ நோ பத்ரா: க்ரதவோ யந்து விஷ்வதா - ரிக் வேதம் 1:89:1

எல்லா திசைகளிலிருந்தும் நல்லுணர்வுகள் நற்செயல்கள் நம்மை வந்தடையட்டும்

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers