Monday, July 11, 2011

தீபாவளி...

தீபாவளி................

துள்ளி திரிந்த காலத்தில் தூக்கமிழக்கச் செய்தது

அப்பா வாங்கி வரும் புத்தாடைக்காய்....

மாமா வாங்கி வரும் பட்டாசுக்காய்....

அம்மா செய்து தரப் போகும் குழிப் பணியாரமும்

அறுசுவை உணவுகளும் உறக்கத்தை கெடுக்கும்...

இரவு முழுக்க பட்டாசு வெடித்தலும்

போட்டி வாணவேடிக்கைகளுமாய்.... பொழுதும் புலர்ந்திடும்...

எண்னைக் குளியலும் குதுகுல எண்ணக்குவியலுமாய்...

புத்தாடை உடுத்தி... பல்சுவை பதார்த்தங்களை பதம் பார்த்து

ஊர் நண்பர்க்ளுடனும் சொந்தங்களூடனும் கொண்டாடி.....

பட்டாம் பூச்சியாய் பறந்த காலங்கள்... இன்றும் பசுமையாய்.....

படர்ந்து பரவியுள்ளது இதயத்தின் ஒரு ஓரத்தில்..... பின்

காலங்கள் கரைந்து தாவணி கனவுகளோடு

கல்லூரியில் காலடி வைத்தப் போது

நாம் .......

கொண்டாடிய தீபாவளி................

வாழ்த்து அட்டைகளுடனும்......நம்

அபிமான நட்சத்திரங்களின் திரைப்படங்களை

முதல் காட்சியை கண்டு களித்ததோடு...நம்

தீபாவளி கொண்டாட்டங்கள் கொஞ்சம் குறுகியது... பின்

வாழ்க்கை பயணத்துக்காய்

பட்டணத்திற்கு பயணமானோம்

அடுக்கங்களில் அடங்கிய நம் வாழ்க்கை

தொலைக்காட்சிகளின் வாழ்த்துகளாலும்

தொலைப்பேசி வாழ்த்துகளாலும்

தொலைந்து போன ஊரின் தீபாவளி கொண்டாட்டங்களை

பகிர்ந்து கொள்கிறோம்...இன்று

வாய்ப்புகள் வந்தாச்சு வாழ்க்கைத்தரமும் உயர்ந்தாச்சு

தீபாவளி கொண்டாட்டங்கள் நம்மை

திகட்டவைத்து திகைக்க வைத்தாலும்

ஊரில் உதட்டில் ஒட்டிக்கொண்ட

அம்மா சுட்ட பணியார சுவை இன்றும்

தித்திப்பாய் திகட்டுகிறது

- மா.பொ

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers